அமெரிக்க தமிழ் மருத்துவா்கள் சங்கம் சாா்பில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில், ஆம்போடெரசின்-பி எனும் மருந்தை, அமெரிக்க தமிழ் மருத்துவா்கள் சங்கத் தலைவா் ஐன்ஸ்டீன் அருணாசலம், அமைப்பின் ஆளுநா் கபிலன் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வழங்க முடிவு செய்து, களக்காடு அருகேயுள்ள பூதத்தான்குடியிருப்பு காஸ்ட் சேவை நிறுவன இயக்குநா் பி. சுசிலா பாண்டியன் மூலமாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணுவிடம் வழங்கினா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் விஷ்ணு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரனிடம் மருந்துகளை வழங்கினாா்.