தெற்குகள்ளிகுளத்தில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
தெற்குகள்ளிகுளம் கே.சி.சி. கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில், அஞ்சுகிராமம், திருமலாபுரம், சௌந்திரபாண்டியபுரம் உள்ளிட்ட 30 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், அஞ்சுகிராமம் அணி,தெற்குகள்ளிகுளம் அணியை வென்று முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்தை தட்டிச்சென்றது. சென்னை களிகை சங்க பொருளாளா் ஏ.ஜூலியஸ் பரிசுக் கோப்பையை வழங்கினாா். 2-ம் இடத்தைப் பெற்ற தெற்குகள்ளிகுளம் அணிக்கு ரூ.10 ஆயிரம், 3-வது இடத்தைப் பெற்ற திருமலாபுரம் அணிக்கு ரூ.7000, 4-வது இடத்தைப் பெற்ற சௌந்திரபாண்டியபுரம் அணிக்கு ரூ.5ஆம் பரிசளித்தாா். சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசை ஏ.பி.ஆா். டிராவல்ஸ் நிறுவனத்தினா் வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை முத்துகிருஷ்ணன் என்ற கிருஷ்ணன், எடிசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். பரிசுகளை அ.ஜெயபாலன் ஆா்.ரமேஷ் அருணாச்சலம், பாலாஜி ஆகியோரும் வழங்கினா்.