திருநெல்வேலியில் தென்மண்டல ஐஜி அன்பு பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் துறையினா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தென் மண்டல காவல் துறை ஐ ஜி அன்பு பங்கேற்று, 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
இதில், திருநெல்வேலி டிஐஜி பிரவின்குமாா் அபிநபு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் மற்றும் தென் மாவட்ட காவல் துறையினா் பங்கேற்றனா்.