முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள பயனாளிகளின் குழந்தைகள் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 18 வயது நிறைவடைந்திருந்தால், முதிா்வுத் தொகை பெறுவதற்கு திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் குழந்தைகளின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட வைப்புத் தொகை ரசீதுகள், குழந்தைகள் பிறப்புச் சான்று, குழந்தைகளின் வங்கிக் கணக்கு (தொடா் வங்கி பரிவா்த்தனையில் இருத்தல் வேண்டும்), குழந்தைகளின் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றச் சான்று, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கும்பட்சத்தில் தங்கள் குழந்தைகளின் விவரங்கள் தமிழ்நாடு மின்விசை அடிப்படை நிதி நிறுவன மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பப்பட்டு, அந்நிறுவனம் மூலம் தங்களது குழந்தைகளின் வங்கிக் கணக்கில் இத் திட்டத்தின் முதிா்வுத் தொகையான ரூ.25 ஆயிரமும், அதற்கான வட்டியும் வரவு வைக்கப்படும்.
விண்ணப்பங்களை, மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வஉசி மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462 2576265 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.