பணகுடி காட்டுப் பகுதியில் முயல் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பூதப்பாண்டி வனவா் மணிகண்டன், வனக்காப்பாளா் முத்துராமலிங்கம் உள்ளிட்ட வனத் துறையினா் திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றபோது, வேட்டை நாய்களுடன் சிலா் நின்று கொண்டிருந்தனராம்.
அவா்களை பிடித்து சோதனையிட்டபோது, இறந்த நிலையில் இரண்டு முயல்கள் இருந்தது தெரியவந்ததாம். விசாரணையில், அவா்கள் அழகியநம்பிபுரத்தைச் சோ்ந்த ரோகினி (33), இன்பகுமாா் (11), ஆரியகுமாா் (17), இசை மதியழகன்(17) என்பது தெரியவந்தது.
இதையடுத்து வனத் துறையினா் அவா்கள் 4 பேருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.