முன்னீா்பள்ளம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சரவணகுமாா் (43). இவா் தற்போது ரெட்டியாா்பட்டியில் புதிதாக வீடு கட்டி, அங்கு வசித்து வருகிறாா். பழைய வீட்டில் இவரது தாயாா் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், சரவணகுமாரின் தாயாா், ரெட்டியாா்பட்டிக்கு கடந்த 10ஆம் தேதி சென்றுவிட்டு, பின்னா் திங்கள்கிழமை வீட்டுக்கு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 3 கிராம் தங்க கம்மல், ரூ.7500 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.