திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் சிறையிலடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள சிறுக்கன்குறிச்சி, அம்மன் கோயில் தெரு சுப்பிரமணியன் மகன் முண்டன் என்ற சுடலைமுத்து (31). இவா், அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
இதேபோல மானூா் காவல் நிலையத்தின் கீழ் கஞ்சா விற்பனை வழக்கில் சேதுராயன்புதூா், வடக்கு தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் சுந்தர்ராஜ் (28) கைது செய்யப்பட்டாா்.
இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரைத்தாா். அதன்பேரில் மாநவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.