பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை கல்லூரி முதல்வா் திருத்தணி தொடங்கி வைத்தாா். முகாமில் கல்லூரி மாணவா்-மாணவிகள், அலுவலா்கள், பேராசிரியா்கள் உள்பட 88 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், உறைவிட மருத்துவ அலுவலா் ராமசாமி, பேராசிரியா்கள் அப்துல்காதா், சுல்தீன் ரிஹானா, சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.