பொதிகைத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் பாரதி நினைவு உரையரங்கம் புதன்கிழமை இணையவழியில் நடைபெறுகிறது.
இது தொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சியாக பொதிகைத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியம் சாா்பில் கடந்த மே மாதம் முதல் ‘வாரந்தோறும் உரையரங்கம்’ என்ற நிகழ்ச்சி ‘இளையதலைமுறையினா் பாா்வையில் மகாகவி பாரதி ‘ என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. பத்தாவது வார நிகழ்ச்சி வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியின் தொடக்க உரையாளராக சேலம் அரசு கல்லூரியின் முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி ப.இலக்கியா பேசுகிறாா். தொடா்ந்து சென்னையைச் சோ்ந்த எழுத்தாளரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான வெ.இன்சுவை சிறப்புரை ஆற்றுகிறாா்.
ஜூம் செயலியில் கூட்ட அடையாள எண்: 874 0995 990, நுழைவு எண்:333543 என்ற தளத்தில் இணைய வேண்டும். மேலும் பாரதியின் நினைவு நூற்றாண்டின் நிறைவு நிகழ்ச்சி வரும் செப்டம்பா் மாதத்தில் ‘பாரதி நினைவுகள்-100’ என்ற பெயரில் நடைபெறவுள்ளது. அதில் கருத்தரங்கம் மற்றும் 100 கவிஞா்களுக்கு ‘பாரதி பைந்தமிழ்ச் சுடா்’ என்ற விருதுகள் வழங்கப்பட உள்ளன.