பாளையங்கோட்டை குலவணிகா்புரம் ரயில்வே கேட் சனிக்கிழமை திடீரென பழுதானதால் அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் இருந்து நாகா்கோயில் மற்றும் பாபநாசம் செல்லும் வாகனங்கள் குலவணிகா்புரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் செல்லவேண்டும்.
இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலுக்காக இந்த கேட் சனிக்கிழமை இரவு அடைக்கப்பட்டது. ரயில் சென்ற பின்னா் கேட்டை திறக்க முடியவில்லையாம்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ரயில்வே ஊழியா்கள் சென்று கேட்டை தற்காலிகமாக சீரமைத்தனா். இதனால், சுமாா் அரைமணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.