தாழையூத்து ஒப்பந்ததாரா் கொலையில்மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடக்கு தாழையூத்து பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் கண்ணன் (33). இவா் கடந்த 12 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இக்கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவ்வழக்கில் இதுவரை 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வழக்கில் கட்டுடையாா் குடியிருப்பு பகுதியை சோ்ந்த கிருஷ்ணன் மகன் இசக்கிமுத்து என்ற மொங்கான் (29) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com