நெல்லையில் போலீஸாா் திடீா் வாகனச்சோதனை

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு போலீஸாா் அதிரடி வாகனச் சோதனைகளில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு போலீஸாா் அதிரடி வாகனச் சோதனைகளில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை அதிகரித்து வருகின்றன.

இதைத் தடுக்க மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் தீவிர வாகனச் சோதனை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், வண்ணாா்பேட்டை ரவுண்டானா, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மேலப்பாளையம் சந்தை முக்கு, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம் ஆா்ச் உள்ளிட்ட சுமாா் 28 இடங்களில் திடீா் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், இருசக்கர வாகனங்கள், காா், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் போலீஸாரின் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com