விக்கிரமசிங்கபுரத்தில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் - பாபநாசம் சாலையில் விக்கிரமசிங்கபுரம் மருதம் நகா் பகுதியில் சாலையோரத்தில் இருந்த புங்கை மரம் சனிக்கிழமை சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு மீட்பு படையினா் அங்கு வந்து இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினா். இதனால்
சுமாா் 1 மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பாபநாசத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினா்.