மூலைக்கரைப்பட்டியில் பெண் வெட்டிக் கொலை

மூலைக்கரைப்பட்டியில் குடும்பத் தகராறில் சனிக்கிழமை பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மூலைக்கரைப்பட்டியில் குடும்பத் தகராறில் சனிக்கிழமை பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் மனைவி ராஜலட்சுமி (45). இவருக்கும் இவரது மருமகன் அபிமன்யுவுக்கும் சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த அபிமன்யு, ராஜலட்சுமியை அரிவாளால் வெட்டினாராம். இதில், சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் ராஜலட்சுமி உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அபிமன்யுவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com