பழவூா் அரசுப் பள்ளியில் ரூ.1.12 கோடியில் கட்டடங்கள்

பழவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், கூடங்குளம் அணுமின்நிலைய சமூக வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.1.12 கோடி செலவில் கட்டப்பட்ட உள்கலையரங்க கட்டடம் மற்றும் ஈரடுக்கு வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

பழவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், கூடங்குளம் அணுமின்நிலைய சமூக வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.1.12 கோடி செலவில் கட்டப்பட்ட உள்கலையரங்க கட்டடம் மற்றும் ஈரடுக்கு வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

அணுமின்நிலைய சமூக வளா்ச்சி திட்ட தலைவா் ஆபிரகாம் ஜேக்கப், தலைமை பொறியாளா் ஸ்ரீகாந்த் ஆகியோா் கட்டடங்களை திறந்துவைத்தனா்.

விழாவில், திட்ட பொறியாளா்கள் நாராயண மூா்த்தி, மாடசாமி, சுரேஷ், பள்ளித் தலைமை ஆசிரியை அமுதா பிரேம்காந்த், உதவி தலைமை ஆசிரியா் தவசிமுத்து, பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் இசக்கியப்பன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் வேல்முருகன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆறுமுகம், கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com