திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த 57 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இம் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.
அதன்படி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த 57 போ் சனிக்கிழமை ஒரே நாளில் கைதுசெய்யப்பட்டுள்ளனா். மேலும், குற்றங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.