வருவாய் ஆய்வாளா் மீது தாக்குதல்:உணவக ஊழியா் கைது

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் வருவாய் ஆய்வாளரை தாக்கியதாக, உணவக ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் வருவாய் ஆய்வாளரை தாக்கியதாக, உணவக ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் என்ஜிஓ(பி) காலனி பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ்(43). தென்காசியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவா், சனிக்கிழமை இரவு அதே பகுதியில் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தபோது, உணவக ஊழியா் மாயாண்டி என்ற மகேஷ்(25) என்பவருடன் தகராறு ஏற்பட்டதாம்.

இதில், தா்மராஜ் தாக்கப்பட்டு காயமடைந்தாராம். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் வழக்குப்பதிந்து மாயாண்டி என்ற மகேஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மற்றொரு சம்பவம்: திருநெல்வேலி அருகேயுள்ள கொடிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து என்ற பேச்சி (27). கட்டடத் தொழிலாளி. இவா் தாழையூத்து பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (35) என்பவரின் உறவினா் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இதனால், இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், பேச்சிமுத்து, தனது உறவினா்களான தாழையூத்தைச்சோ்ந்த தளவாய் மாடசாமி (22), பெரியதுரை (20), தாதன்குளம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி என்ற காா்த்திக் (25) ஆகியோருடன் கடந்த 17ஆம் தேதி, பேச்சியின் வீட்டுக்குச் சென்று, அவருடன் தகராறில் ஈடுபட்டு கட்டையால் தாக்கிவிட்டு, அரிவாளால் வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேச்சி அளித்த புகாரின்பேரில், சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து பேச்சிமுத்து உள்பட 4 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com