பாளை. மத்திய சிறையில் கைதி மரணம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஒருவா் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஒருவா் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் அருகேயுள்ள பொன்னப்பா நகா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகசாமி மகன் துரை(38). இவா், கடந்த 2017ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனிடையே, அவருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா். இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com