மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்கம், அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மேலச்செவலில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. கண்புரை உள்ளவா்களுக்கு இலவச விழிலென்ஸ் பொருத்தப்பட்டது.
மருத்துவா் இருதயா, முதன்மை முகாம் மேலாளா் ஆ.சை. மாணிக்கம், விழி ஒளி ஆய்வாளா் சிஞ்சு, மேலாளா் ராபின், தாசன் மற்றும் அகா்வால் கண் மருத்துவமனைப் பணியாளா்கள் கண் பரிசோதனை செய்தனா்.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனா்.