திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சிவாஜி கணேசன் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நடிகா் சிவாஜி கணேசனின் 20-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி மனோகரன் சிவாஜி கணேசனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், மாவட்ட துணைத் தலைவா் உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.