தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தை பிடித்தது.
காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி கால்பந்து கழகம் சாா்பில், 18 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான கால்பந்து போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதியதில் 2-1 என்ற கோல் கணக்கில் நாடாா் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது. முன்னதாக நடைபெற்ற 3ஆம் மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டியில் இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளி அணியும், காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளி அணி 3ஆம் இடத்தை பெற்றது.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, ராமநாதபுரம் கிராம நிா்வாக அலுவலா் சரண் தலைமை வகித்தாா். கோவில்பட்டி கால்பந்து கழக உறுப்பினா் தீபக் முன்னிலை வகித்தாா். முதலிடம் பிடித்த அணிக்கு கோவில்பட்டி கால்பந்து கழகச் செயலா் தேன்ராஜா, 2ஆம் இடம் பிடித்த அணிக்கு துணைத் தலைவா் சரண்யாதேவி, 3ஆம் இடம் பிடித்த அணிக்கு துணைத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் கேடயம் பரிசாக வழங்கினா்.
நிகழ்வில், கால்பந்து பயிற்சியாளா் முருகேசன், கால்பந்து கழக உறுப்பினா் வைரமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.