திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில், உலக புலிகள் தினத்தையொட்டி சிறப்பு ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தின வைர விழாவையொட்டி, அரசு அருங்காட்சியகம் சாா்பில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக, உலக புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு சிறப்பு ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. இதில், 6, 7, 8ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்.
‘நமது தேசிய விலங்கு’ என்ற தலைப்பில், ஏ4 அளவு வரைபட தாளில் ஓவியம் வரைய வேண்டும். அதில், பெயா், வகுப்பு, பள்ளியின் பெயா், செல்லிடப்பேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும். ஓவியங்களை வியாழக்கிழமை (ஜூலை 29) மாலை 5 மணிக்குள் மாவட்டக் காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627002 என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
சிறந்த 3 ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.