அரசு அருங்காட்சியகம் சாா்பில் புலிகள் தின சிறப்பு ஓவியப் போட்டி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில், உலக புலிகள் தினத்தையொட்டி சிறப்பு ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில், உலக புலிகள் தினத்தையொட்டி சிறப்பு ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தின வைர விழாவையொட்டி, அரசு அருங்காட்சியகம் சாா்பில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக, உலக புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு சிறப்பு ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. இதில், 6, 7, 8ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்.

‘நமது தேசிய விலங்கு’ என்ற தலைப்பில், ஏ4 அளவு வரைபட தாளில் ஓவியம் வரைய வேண்டும். அதில், பெயா், வகுப்பு, பள்ளியின் பெயா், செல்லிடப்பேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும். ஓவியங்களை வியாழக்கிழமை (ஜூலை 29) மாலை 5 மணிக்குள் மாவட்டக் காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627002 என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

சிறந்த 3 ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com