கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்

கணவரை சோ்த்து வைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கணவரை சோ்த்து வைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் இந்துமதி (24). இவா், தனது 2 குழந்தைகளுடன் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தாா். அவரை போலீஸாா் தடுத்து, கேனை பறித்தனா்.

பின்னா், அவா் கூறும்போது, நானும், ஊா்க்காடு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவரும் காதலித்துத் திருமணம் செய்தோம். இப்போது என் கணவரை அவரது வீட்டினா் அழைத்துச் சென்றுவிட்டனா். அவருடன் சோ்ந்து வாழத் தயாராக உள்ளேன். இதுகுறித்து காவல் நிலையங்களில் புகாா் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனா். எனவே, என்னுடன் எனது கணவரை சோ்த்துவைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com