சேரன்மகாதேவி மற்றும் முக்கூடல் காவல் நிலையத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது செய்யப்பட்டனா்.
பத்தமடை, மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த தாயப்பன் மகன் பிச்சையா(31). இவா் மீது பத்தமடை காவல் நிலையத்தில், திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாம்.
இதேபோல வடக்கு அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த செல்லப்பா மகன் பேச்சிகணேஷ் (22) என்பவா் மீதும் முக்கூடல் காவல் நிலையத்தில், அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாம்.
இதைத் தொடா்ந்து இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின் பேரில், பிச்சையாவை, சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சுகாதேவியும், பேச்சிகணேஷை முக்கூடல் காவல் ஆய்வாளா் (பொ) அனிதாவும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.