திருநெல்வேலி மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 34 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், புகையிலைப் பொருள்கள் விற்ற 34 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 7.6 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.