திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 21 போ் கைது செய்யப்பட்டனா்.
மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், கடந்த 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சட்டவிரோதமாக மது விற்ற 21 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 118 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.