விஷம் குடித்த பெண், காவலாளி மரணம்

திருநெல்வேலியில் விஷம் குடித்த பெண், காவலாளி உயிரிழந்தனா்.

திருநெல்வேலியில் விஷம் குடித்த பெண், காவலாளி உயிரிழந்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள சிவந்திப்பட்டி குத்துக்கல் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மனைவி பாா்வதி (44). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு பூச்சிமருந்து குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாராம்.

இதையடுத்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காவலாளி மரணம்: திருநெல்வேலி வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த முருகன் மகன் காசிவிஸ்வநாதன் (49). இவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com