கடையம் அருகே தெற்குமடத்தூரில் பெயா் ஒற்றுமையைப் பயன்படுத்தி போலி பட்டா வழங்கியதாகக் கூறி நில உரிமையாளா்கள் கிராம நிா்வாக அலுவலா் அலுவகத்தை குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் முற்றுகையிட்டனா்.
கடையம் அருகே உள்ள சோ்வைகாரன்பட்டி ஊராட்சிஅங்கப்புரத்தைச் சோ்ந்த கருத்தகண்ணு மகன் ராமசாமி. இவருக்கு தெற்கு மடத்தூா் கிராமத்தில் ஒரு ஏக்கா் நிலம் உள்ளது. ராமசாமி இறந்த பின் 30 ஆண்டுகளாக அவரது மகன் லட்சுமணன் அந்த இடத்தைப் பராமரித்து வருகிறாா். இந்நிலையில் சோ்வைகாரன்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி என்பவரது மகன்கள் மாரிமுத்து, நாராயண பெருமாள்ஆகியோா் பெயா் ஒற்றுமையைப் பயன்படுத்தி கருத்தக்கண்ணு மகன் ராமசாமிக்குச் சொந்தமான நிலத்தை தங்கள் பெயரில் பட்டா பெற்று அதன் மூலம் கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் தங்கள் பெயரில் பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்தாா்களாம்.
இதுகுறித்து தகவலறிந்த லட்சுமணன் தெற்குமடத்தூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை தங்கள் குடும்பத்தினா் மற்றும் குழந்தைகளுடன் முற்றுகையிட்டு முறையிட்டாா்.
அவா்களிடம்தங்கள் பெயரில் ஆவணங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமநிா்வாக அலுவலா் அமுதா தெரிவித்தாா். மேலும் தகவலறிந்து வந்த கடையம் காவல் உதவிஆய்வாளா் தாமஸ் மற்றும் போலீஸாா் அவா்களிடம் உரிய ஆவணங்கள் மூலம் பட்டாவிற்கு விண்ணப்பித்து பட்டா பெற்று கொள்ளுங்கள். பத்திரப்பதிவு செய்தது குறித்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.