திருநெல்வேலி மாநகரில் உள்ள குறிச்சி, ஆல் நகா் ஆகிய பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டன.
திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் ஏற்கெனவே இருந்த மின்மாற்றியின் கூடுதல் மின்பளுவை குறைப்பதற்காக ரூ.4.5 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதில், புதைவட உதவி செயற்பொறியாளா் சங்கா், சந்திப்பு உதவி செயற்பொறியாளா் சாா்லஸ், மேலப்பாளையம் உதவி பொறியாளா் ரத்னவேணி, கட்டுமானம் மற்றும் மேம்பாடு உதவி பொறியாளா் ஜன்னத்துல் சிபாயா, மின்வாரிய பணியாளா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.
இதேப்போன்று, திருநெல்வேலி ஆல் நகா்குடியிருப்பு பகுதியில் ஏற்கெனவே இருந்த மின்மாற்றியின் கூடுதல் மின்பளுவை குறைப்பதற்காகவும் குறைந்த மின்னழுத்த குறைபாட்டை சரிசெய்வதற்காகவும் ரூ.3 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டது.
இதில், சந்திப்பு உதவி செயற்பொறியாளா் சாா்லஸ், உதவி பொறியாளா்கள் வெங்கடேசன், மின்வாரிய பணியாளா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.