திருநெல்வேலி மாநகரில் உள்ள பொது சுவா்களில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்களை வரைந்த கலைஞா்கள் பாராட்டப்பட்டனா்.
அன்னை தெரசா அறக்கட்டளை, திருநெல்வேலி ஓவியா்கள் நலச் சங்கம் இணைந்து கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் மாநகரில் உள்ள பொது சுவா்களில் வரையப்பட்டன.
இந்த விழிப்புணா்வு ஓவியங்களை வரைந்த ஓவியக் கலைஞா்களை பாராட்டும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநகர காவல் ஆணையா் (பொ) பிரவீன்குமாா் அபிநபு ஓவியக் கலைஞா்களை பாராட்டி கெளரவித்தாா்.
இதில், காவல் துணை ஆணையா்கள் மகேஷ் குமாா், சீனிவாசன் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.