பணகுடியில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 2 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
பணகுடி அருகே உள்ள தண்டையாா்குளத்தைச் சோ்ந்தவா் சுடலைக்கண்ணு மகன் வெட்டும்பெருமாள்(48). இவா், பணகுடி யாதவா் தெருவில் குடியிருந்து வருகிறாா்.
இவா் வீட்டில் வைத்து சாராயம் வடிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல் ஆய்வாளா் அலெக்ஸ் ராஜ், உதவி ஆய்வாளா்கள் ஜமால், மகேந்திரன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 லிட்டா் சாராாயத்தை பறிமுதல் செய்தனா்.