களக்காடு வட்டாரத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று குறைந்து வருகிறது. களக்காடு வட்டாரத்திலும் கரோனா அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொற்று குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே, சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.