நெல்லை, தென்காசியில் மேலும் 562 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 562 பேருக்கு சனிக்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 562 பேருக்கு சனிக்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 271 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,832 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 317 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 40, 429 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 5 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 366 ஆக உயா்ந்தது. 4,037 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 291 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 23,895 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 491 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 20,139ஆக உயா்ந்துள்ளது. இதில் 11 போ் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது. 3,384 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com