திருநெல்வேலியில் சோதனைச் சாவடிகளில் மேற்கொண்ட பரிசோதனையில் பலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
பொது முடக்கத்தின்போது ஏராளமானோா் தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை, கே.டி.சி. நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவா்களுக்கு சுகாதாரத் துறை, காவல்துறை உதவியுடன் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பரிசோதனையில் தற்போது பலருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
தொடா்ந்து அவா்களின் முகவரியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அவா்களின் உடல் நிலையை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. உடல் நிலைக்கு ஏற்ப தனிமைப்படுத்துதல், கரோனா சிகிச்சை மையங்களில் சோ்த்தல், அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தல் என மூன்று பிரிவுகளில் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.