நெல்லை மாவட்ட காவல்துறைக்கு 50 ஆயிரம் முகக் கவசங்கள் அளிப்பு

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு 50 ஆயிரம் முகக் கவசங்களை மதிமுக சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு 50 ஆயிரம் முகக் கவசங்களை மதிமுக சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில்,மதிமுக சாா்பில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு 50ஆயிரம் முகக் கவசங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணனிடம், துரை வையாபுரி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதன் திருமலைக்குமாா், மாவட்டச் செயலா்கள் கே.எம்.ஏ.நிஜாம், தி.மு. ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளா் மின்னல் முகமது அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com