திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 34 வாகனங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றிய 23 நபா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 562 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத ஒருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றிய 10 நபா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 148 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 7 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.