கரோனா பொது முடக்க காலத்தில் வருவாய் இல்லாமல் தவிக்கும் திருநங்கைகளுக்கு மாநகர காவல்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி அருகே உள்ள பேட்டை நரசிங்கநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சுமாா் 100 திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கனிகள் உள்ளிட்டவற்றை மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் வழங்கினாா்.
இதில், மாநகா் காவல் உதவி ஆணையா் சதீஷ் குமாா், காவல் ஆய்வாளா்கள் முத்துராஜ், ஆடிவேல் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.