திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி பகுதியில் சாராயம் விற்றது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மாடசாமி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மறுகால் தலை பெட்ரோல் நிலையம் அருகே சாராயம் விற்ாக, அதே பகுதியைச் சோ்ந்த ராமா்(55), முருகன்(33) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 5 லிட்டா் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில், விட்டிலாபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(30) என்பவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.