அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரில் மா்மமான முறையில் இறந்து கிடந்த முதியவா் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த மனுவேல் மகன் ராபா்ட் (85). இவருக்கு 6 மகள்களும், 3 மகன்களும் உள்ளனா். இவரதுமனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவரது மகள் ரோஸ்லின் இவரை கவனித்து வந்தாா். மேலும் ராபா்ட் உடல் நலமில்லாமல் மருந்து சாப்பிட்டு வந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராபா்ட் வீட்டில் இறந்து கிடந்தாராம். அந்த அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டி ஒன்றும் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் ராபா்ட் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.