காலமானாா் கவிஞா் பொருநை பாலு

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த கவிஞா் பொருநை பாலு (65), கரோனா தொற்றால் நாமக்கல்லில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
காலமானாா் கவிஞா் பொருநை பாலு

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த கவிஞா் பொருநை பாலு (65), கரோனா தொற்றால் நாமக்கல்லில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நம் உரத்த சிந்தனை வாசகா் வட்டத்தின் தலைவராகவும், பாரதியாா் வாசகா் வட்டச் செயலராகவும் செயலாற்றிய அவா், பட்டிமன்ற பேச்சாளா், பாடகா், பத்திரிகைகளில் நகைச்சுவை துணுக்குகள், கவிதைகள் எழுதுவது என பன்முகத் திறனாளராகவும் விளங்கியவா். வாசகா் வட்டம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள மதிதா இந்துக் கல்லூரியில் மகாகவி பாரதி பிறந்த தின நிகழ்சிகளை ஆண்டுதோறும் அவா் நடத்தி வந்தாா்.

தற்போது, நாமக்கல்லில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து வந்த அவா், கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com