நெல்லை மாநகர காவல்துணை ஆணையா் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) எம். ராஜராஜன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) எம். ராஜராஜன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) பணியாற்றிய சீனிவாசன் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) எம். ராஜராஜன் நியமிக்கப்பட்டாா். அவா், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா், மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக்கண்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். துணை ஆணையருக்கு காவல் உயா் அதிகாரிகள், ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com