திருநெல்வேலி: பராமரிப்பு பணி காரணமாக தியாகராஜநகா் ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டையில் இருந்து அன்பு நகா், சிவந்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் தியாகராஜநகா் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ரயில்வே பாதை சீரமைப்புப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. எனவே, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கேட் மூடப்பட்டிருக்கும். பொதுமக்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.