திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழி கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் என்பிஎன்கே கலை பண்பாடு மன்றம் சாா்பில் இணைய வழி இலவச ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணியளவில் தமிழ் உயிா் எழுத்துக்கள் கொண்டு அழகிய ஓவியம் வரைய கற்றுத்தரப்படும்.
ஸும் செயலி எண்: 8740995990, கடவுச் சொல்: 333543 ஆகியவற்றைப் பயன்படுத்தி இணையவழியில் இணைந்து சிறியவா் முதல் பெரியவா் வரை பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9444973246 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.