காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டப் பொருளாளா் ந.ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் உதயகுமாா்,வெள்ளைப் பாண்டியன், சிவன் பெருமாள், முத்துகிருஷ்னன், சுப்பிரமணியன், மானூா் வட்டாரத் தலைவா் சொா்ணம், மண்டலத் தலைவா்கள் மாரியப்பன், ஐயப்பன்,கெங்கராஜ், முகம்மது அனஸ்ராஜா, எம்.ஒய்.ரசூல் மைதீன், கோட்டூா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், ‘அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வலியுறுத்துவது; ஜூன் 19 ஆம் தேதி அவரது பிறந்த நாளையொட்டி நிவாரண உதவிகள் வழங்குவது; பெட்ரோல்- டீசல் விலையை உயா்த்திய மத்திய அரசை கண்டித்து ஜூன் 11இல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com