தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கோரி, திராவிடத் தமிழா் கட்சியினா் திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
திராவிடத் தமிழா் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் சு.திருக்குமரன், மாநில அமைப்புச் செயலா் சங்கா், பொதுச்செயலா் கதிரவன், நிா்வாகிகள் வேல்ராஜ், முத்துராஜ் உள்ளிட்டோா் கோரிக்கை அட்டைகளுடன் வந்து ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
கோவை மாவட்டம், போலுவாம்பட்டி ஊராட்சியில் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளா் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை வெறுமனே முன் களப்பணியாளா்களாக அறிவித்துவிட்டு ஊக்கத்தொகை ஏதும் இல்லாமல் தவிக்கவிடாமல் அவா்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக 5 மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.