திருநெல்வேலி , தென்காசி மாவட்டங்களில் 448 பேருக்கு புதிதாக கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 258 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 45,726 ஆக அதிகரித்தது. அதில்,மேலும் 602 போ் குணமடைந்ததால் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 42,330 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 376 போ் உயிரிழந்துள்ள நிலையில், 3,020 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 190 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 24,738 ஆகவும், அதில் 677 போ் புதன்கிழமை வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 21,891 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 406 போ் உயிரிழந்துள்ள நிலையில், 2,441 போ் சிகிச்சையில் உள்ளனா்.