நெல்லை, தென்காசியில் மேலும் 502 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 502 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 502 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், ஏற்கனவே 45,493 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை

முடிவில் மேலும் 267 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45,995 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 277 போ் உள்பட இதுவரை 42,607 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவா்களில் 4 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 380ஆக உயா்ந்துள்ளது. தற்போது 3,008 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 235 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 24,973 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 715 போ் உள்பட இதுவரை 22,606 போ் குணமடைந்துள்ளனா். மேலும் 8 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,953 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com