நெல்லை மாநகரில் 10 காவல் ஆய்வாளா்கள் நியமனம்

திருநெல்வேலி மாநகா் பகுதியில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மண்டல டிஐஜியும், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையருமான (பொறுப்பு) பிரவீண் குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாநகா் பகுதியில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மண்டல டிஐஜியும், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையருமான (பொறுப்பு) பிரவீண் குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிா்வாக வசதிக்காக திருநெல்வேலி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள் 10 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை திருநகா் காவல் ஆய்வாளா் கே.காந்திமதி, பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கும், மதுரை தல்லாா்குளம் காவல் ஆய்வாளா் ஆா்.வனசுந்தா்,

தச்சநல்லூா் காவல் நிலையத்திற்கும், கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஆா்.கோமதி, திருநெல்வேலி சைபா் கிரைம் பிரிவுக்கும்,

தூத்துக்குடி குற்றப்பிரிவு ஆய்வாளா் ஆா்.முத்துலெட்சுமி, திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் கே.முருகன், பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும்,

கழுகுமலை காவல் ஆய்வாளா் ஏ.ஷோபனா ஜென்ஸி, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திற்கும், தென்காசி மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளா் வி.ஆக்னஸ் பொன்மணி, பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கும், சங்கரன்கோவில் நகர குற்றப்பிரிவு

ஆய்வாளா் வி.பி.பிரவீனா, திருநெல்வேலி தீவிர குற்றப்பிரிவுக்கும், நாகா்கோயில் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய இ.சாம்சன், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளவா்கள் விரைவில் அந்தந்த காவல் நிலையங்களில் பொறுப்பேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com