பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையத்தில் பீடி தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பீடி தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூ. 7,500 வழங்க வேண்டும். தரமான இலை 700 கிராம் வழங்க வேண்டும். புதிய கூலி உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாா்வதி தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ செயலா் ஆா்.மோகன் விளக்கிப்
பேசினாா். இதில் நிா்வாகிகள் இந்திரா, மகாலட்சுமி, கிருஷ்ணவேணி, கலா, மைதீன், ஆட்டோ முருகன், சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.