மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். அவைகள் மீதான அதிகப்படியான வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொதுச் செயலா் க. ஹயாத்முகம்மது தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீது, தொழிற்சங்க மாவட்டத் தலைவா் சலீம் தீன், மாவட்டச் செயலா் ஆட்டோ செய்யது, சிந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். கட்சியின் நிா்வாகிகள்
கலந்துகொண்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி நகரம், பேட்டை, சுத்தமல்லி, தாழையூத்து, பா்கிட்மாநகரம், மானூா், சீதைகுறிச்சி, தெற்குபட்டி, குறிச்சிகுளம் பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.